• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர் புஸ்பராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலே இக்கொலைக்குக் காரணம் என  ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 

Leave a Reply