• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யா, வடகொரியா இராணுவ ஒப்பந்தம் - தென்கொரியா எச்சரிக்கை 

கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-களின்போது உள்நாட்டுப் போா் வெடித்தது. அந்தப் போரில் ஒரு தரப்புக்கு சோவியத் யூனியனும், மற்றொரு தரப்புக்கு அமெரிக்காவும் உதவின.

இறுதில் 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கிம்-ஜோங்-உன்-னின் தாத்தா கிம் இல்-சங் தலைமையிலான கம்யூனிச அரசும், தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக அரசும் அமைந்தன.

அதிலிருந்தே வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதும், அபாயகரமானதும் ஆகும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் அந்த நாட்டின் அதிபா் யூன் சுக்-இயோல் தெரிவிக்கையில்,

“வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அண்மையில் ரஷ்யா சென்றிருந்தாா். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, வட கொரியாவுடன் இதுபோன்ற ராணுவக் கூட்டணி அமைப்பது மிகவும் அபாயகரமானதாக அமையும்.

மேலும், சா்வதேச சட்டங்களுக்கு அது எதிரானது ஆகும்.” என்றார்.

வலிமை மிக்க அமெரிக்காவை எதிா்கொள்வதற்காக, சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியது.

மேலும், அந்த அணு ஆயுதங்களை ஏந்தி சென்று முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்கான ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளையும் வட கொரியா உருவாக்கி வருகிறது. இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த அனைத்து தீா்மானங்களையும் ரஷ்யா ஆதரித்து வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத வெடிபொருள்களின் கையிருப்பு ரஷ்யாவிடம் குறைந்து வருவதாலும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அவற்றை பிற நாடுகளிலிருந்து வாங்க முடியாததாலும் வட கொரியாவிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் விமான எதிா்ப்பு எறிகணைகளை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் கூறியிருந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில், குண்டு துளைக்காக தனி ரயில் மூலம் ரஷ்யாவுக்கு கிம் ஜோங்-உன் கடந்த 12-ஆம் திகதி சென்றிருந்தார்.

அங்கு அதிபா் புடினை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திய அவா், இராணுவத் தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

எனவே, ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ரஷ்யா அளிப்பதற்குமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படும் என்று தென் கொரியா எச்சரித்து வருகிறது.

Leave a Reply