• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு

இலங்கை

“தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” என இரண்டாவது தடவையாகவும் யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று  (22)  உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி, யாழ் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சட்டமா அதிபர், திணைக்களத்தின் பிரதானிகளினால் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி மீண்டுமொரு மனு தாக்கல்  செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மனு மீதான விசாரணைகள் இன்று(22) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply