• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிள்ளையானின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்

இலங்கை

”கடத்தல் மற்றும்  கொலைகள் மூலம்  இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில்நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” சனல் 4 ஆவண படம் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக வெளியிட்டுள்ளதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எனக் கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரியே பிள்ளையான். அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலான மூலம் அந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து மக்கள் விழிப்படைந்துள்ளனர் எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது.

தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்த்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து அடித்து நெருக்கி தமிழ் மக்கள் இன்று நடக்க முடியாத நிலையில் தாய் தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று கையும் மெய்யமாக பிடிபட்டுள்ளனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும். அவருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில் பரம்பரைக் காணி இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல் இலஞ்சம் கொலைகள் கொள்ளைகள் கடத்தல் காணாமல் போன செய்ததன் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது. எனவே இவ்வாறாக சேகரித்த அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். நீதி பிறக்கவேண்டும்” இவ்வாறு தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply