• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்-இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

இலங்கை

“சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்” என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

உலக சமாதான நாளான நேற்று,  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கடந்த காலங்களில் சமாதானமின்மையினால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யும் விதமானஅனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

எமது நாட்டில் சமாதானமின்மையால் ஏற்பட்ட பிரச்சினைகள் ,அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், பொருளாதார தாக்கம்  என்பவற்றை நாம் அறிவோம்.

இனிமேல் எந்தவகையிலேயும் சமாதானம் இல்லாமல் போகக்கூடாது என்ற அடிப்படையில் உலக சமாதான தினத்தன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை முன்னெடுத்துள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply