• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துன்னாலையில் இரு குழுக்களிடையே மோதல் -இருவர் காயம்

இலங்கை

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றையதினம்  இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில்  இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு காணப்பட்டு வந்துள்ள நிலையிலேயே நேற்றிரவு மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோதலின் போது காயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply