• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்

இலங்கை

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply