• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவில் 19 மீனவர்கள் கைது

இலங்கை

இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அவர்கள் பயணித்த 3 படகுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை  மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்த கடற்படையினர், அவர்களை  நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply