• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கை

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம்  நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட மாநகர ஆணையாளர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும்  தெளிவுபடுத்தினார்.

திண்மக்கழிவகற்றல் சேவையின்போது மாநகர சபையினால் வகுக்கப்படும் பொறிமுறைகளுக்கேற்ப திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் குப்பைகள் ஒப்படைக்கப்படுமாயின் பாடசாலைகளில் இருந்து அவற்றை இலகுவாக அகற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது  சுட்டிக்காட்டினார்.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, திண்மக்கழிவகற்றல் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பாடசாலைகளின் அதிபர்களும் பங்கேற்றிருந்தனர்.
 

Leave a Reply