• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகிஸ்தானில் 45 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பள்ளி முதல்வர்

பாகிஸ்தானில் வேலை தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, பள்ளி முதல்வர் மீது மேலும் இரண்டு பெண்கள் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் உரிமையாளர் மற்றும் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
  
அவர் 45 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த 4ஆம் திகதி குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பெண்கள் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

அவர்களில் ஒரு பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், குறித்த பள்ளி உரிமையாளர் தன்னை வன்புணர்வு செய்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இரு பெண்களும் தனித்தனியாக அளித்த வாக்குமூலத்தில், பள்ளி முதல்வர் தொடர்ந்து பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி, அலுவலகத்திற்கு வரவழைத்து தன்னை வன்புணர்வு செய்துள்ளார் அவர் என்று கூறிய பாதிக்கப்பட்ட பெண், ஒரு வாரம் கழித்து பணியில் சேருமாறு கூறி வீடியோவை காட்டி மிரட்டி மீண்டும் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே குறித்த பள்ளி முதல்வர் மீது 45 பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply