அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் வீட்டிற்குள் மலைப்பாம்பு புகுந்தது.
ICC ஆண்கள் ODI உலகக் கோப்பை 2023 அக்டோபரில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த மெகா போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் சமீபத்தில் கூறினார்.
அவுஸ்திரேலியா 1999, 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்றது. இந்த மூன்று மெகா போட்டிகளிலும் மெக்ராத் முக்கிய வீரராக இருந்தார்.
உலகக் கோப்பைப் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் விஷயங்களில் மெக்ராத் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசுவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் மெக்ராத் மலைப்பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.