• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

இலங்கை

யாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல் மற்றும்  மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளிலேயே   இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக உரிமையாளர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் திருட்டில் ஈடுபட்டவர்கள்  கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த திருட்டு கும்பல்கள் வலையமைப்பாக செயற்பட்டு வருவதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உதிரி பாகங்களாக கழட்டி விற்பனை செய்வதனால், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்பதும்,  திருடர்களைக் கைது செய்வதும் பெரும் சவாலாக உள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இது குறித்த தீவிர விசாரணைகளை  தாம் முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply