• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த செய்தி

இலங்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குஇருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

குறித்த இயந்திரத்தினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்துகொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்; கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply