• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருந்தூர்மலை விவகாரம் - தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

இலங்கை

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைநீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகத்திற்கு இருந்தும், குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றால் இதற்குமுன் வழங்கப்பட்ட கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர்நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளையை மீறி தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

அதற்கமைய, முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் கட்டளையே நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply