• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 170,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டுக்கு

இலங்கை

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 15 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளியேறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் 24 ஆயிரத்து 578 பேர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் 2022 இல் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 11 ஆயிரத்து 56 ஆகும்.

இதற்கிடையில், ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ வழிகள் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பட்ட பணம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் அனுப்பட்ட மொத்த பணம் 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 

Leave a Reply