• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை விவசாயிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய ஜப்பான் அரசு 

இலங்கை

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இரண்டரை ஏக்கர்  அளவிற்கு உட்பட்ட அளவிலுள்ள  வயல் நிலங்களுக்கே இவ்வாறு  உரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று காலை 8.30 மணியளவில் ஒட்டுசுட்டான் கமனல அபிவிருத்தி நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுடைய தலைமையில் ஒரு தொகுதி உரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply