• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷிய எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

ரஷியாவின் தெற்கு பகுதியில் தாகெஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து 12 பேர் உயிரிழந்ததனர் என்றும், 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து எரிவாயு நிலையத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது.
 

Leave a Reply