• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராஜ குடும்பத்தில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்ச்சி

ராஜ குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்த இளவரசர் ஆண்ட்ரூ கூட தன் முன்னாள் மனைவியுடன் அந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆனால், இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவிக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு இல்லை! அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன், மன்னர் சார்லசின் தாயாகிய எலிசபெத் மகாராணியார் மரணமடைந்து ஒரு ஆண்டு முடிவடைகிறது.
  
மகாராணியார் மறைந்ததன் ஓராண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பால்மோரல் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா உட்பட ராஜ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும்கூட அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மறைந்த மகாராணியாரின் செல்லப் பேரனான இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

இத்தனைக்கும், ஹரி, செப்டம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியில் துவங்க இருக்கும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்காக Düsseldorf நகருக்கு வருகிறார்.

ஆகவே, அவர் மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் எளிதாக கலந்துகொள்ள முடியும். ஆக, ஹரி மகாராணியாரின் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது ஐரோப்பாவிலேயே இருந்தும் கூட அவருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. 
 

Leave a Reply