• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆட்சேர்ப்பு - 300 வெற்றிடத்திற்கு 8000 விண்ணப்பங்கள்!

இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இன்று (03) காலை இடம்பெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பமானது.

8,000 விண்ணப்பங்கள்
விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்ப்புக்கு இந்த இரண்டு நாள் நேர்காணலுக்கு இன்று பெருமளவிலானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

நேர்காணலுக்காக சுமார் 8,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் 200 முதல் 300 பேர் வரை மாத்திரமே பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
 

Leave a Reply