• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதிய ஆவணங்கள் இன்றி குவைத்தில் தங்கியிருந்த 62 இலங்கை பிரஜைகள் நாடு கடத்தல்..!

குவைத் சிட்டி: போதிய ஆவணங்கள் இன்றி குவைத்தில் தங்கியிருந்த 62 இலங்கை பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.  நாடு கடத்தப்பட்டவர்களில் 59 பேர் வீட்டு வேலையாட்கள். வீட்டு சேவை ஒப்பந்தம் முடிந்து குவைத்தில் பல்வேறு வேலைகளை செய்து வந்தனர். இவர்கள் குவைத்தில் 250 தினார் மாத சம்பளத்தில் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்ததாக இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2000க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply