• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவூதி தைஃப் நகரில் தொடங்கியது உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழா..!

இலங்கை

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) தொடங்கியது. இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் வருகை தந்துள்ளன. 350 போட்டிகள் கொண்ட ஆரம்ப கட்டங்களுடன் போட்டி நடத்தப்படுகிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாபெரும் பரிசுகளை ஏற்பாட்டாளர்கள் தயார் செய்துள்ளனர். 

இந்த போட்டியை சவுதி ஒட்டக கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. வளைகுடா, அரபு பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் ஒட்டக உரிமையாளர்கள் பங்கேற்கும் போட்டி நடைபெறவுள்ளது. இது 12 நாட்களுக்கு தொடரும். 

ஆரம்ப நிலை போட்டி காலை 6.30 மற்றும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இறுதிச் சுற்று ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது. 11 நாட்கள் இந்த போட்டி நீடிக்கும். இறுதி கட்டத்தில் ஐந்து மாரத்தான் பந்தயங்களும் 239 சுற்றுகளும் நடைபெறும்.

இம்முறை பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக புள்ளிகள் பெறும் ஒட்டக உரிமையாளருக்கு வழங்கப்படும் கிரவுன் பிரின்ஸ் வால் விருது தொகை 10 லட்சம் ரியாலில் இருந்து 17.5 லட்சம் ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த பரிசுத் தொகை 5.7 கோடியைத் தாண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தற்போது, Crown Prince Camel Festival உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவாக மாறியுள்ளது.
 

Leave a Reply