• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஹெரோயின்

இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,”மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டவேளை  உயிரிழந்துள்ளார் எனவும்  ஹெரோயினை பாவித்தமையால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும்  மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply