• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதலனை கொல்ல கொடிய விஷப்பாம்பை பயன்படுத்திய பெண்

இந்தியா

வட இந்தியாவில் தொலைக்காட்சி நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, பெண் ஒருவர் தமது காதலனை கொலை செய்ய கொடிய விஷப்பாம்பை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

குறித்த நபருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தவர், புதிய காதலனுடன் புதிய வாழ்க்கையை துவங்க திட்டமிட்டுள்ளார். மஹி ஆர்யா என்ற அந்த பெண், பாம்பாட்டி ஒருவரை கொலைக்கு பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து தமது புதிய காதலனான தீப் காண்ட்பால் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து பொலிசார், குழு அமைத்து இருவரையும் தீவிரமாக தேடியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் இருவரும் கைதாகினர்.

தமது முன்னாள் காதலனான அங்கித் சவுகானை கொல்ல புதிய காதலனுடன் இரண்டு மாதங்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுமார் 10,000 ரூபாய் கட்டணத்தில் பாம்பாட்டி ஒருவரை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தன்று தமது குடியிருப்புக்கு சவுகானை விருந்துக்கு அழைத்துள்ளார். விருந்தின் போது விஷம் கலந்த மதுவை பரிமாறியுள்ளார். இதில் தடுமாறிப் போயிருந்த சவுகானை பாம்பு இரண்டுமுறை காலில் தீண்டியுள்ளது.

இதில் மொத்தமாக சுயநினைவை இழந்துள்ளார். தொடர்ந்து அவரை இழுத்துச் சென்று, அவரது காருக்குள் கொண்டு சேர்த்துள்ளனர். ஜூலை 15ம் திகதி சவுகானின் சடலத்தை அவருக்கு அறிமுகமான ஒருவர் கண்டறிய, உடனடியாக பொலிசாருக்கும் சவுகானின் சகோதரிக்கும் தகவல் அளித்துள்ளார்.

துரித நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார் மஹி மற்றும் அவரது புதிய காதலனையும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வைத்து கைது செய்துள்ளனர். 

Leave a Reply