• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டார் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு சம்பவம் - 54 பேர் படுகாயம்

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (22) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டாரின் ராஸ் லஃபான் தொழிற்துறை நகரில் அமைந்துள்ள ‘பர்சான்’ தொழிற்சாலையிலேயே குறித்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக கட்டார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொழில்நுட்பக் கோளாறே இந்த வெடிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெடிப்பின் பின்னர் ஆலைக்கு வெளியே நச்சு வாயு அல்லது எரிவாயுக் கசிவு ஏற்படவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தொழிற்துறை மையத்தை நிர்வகிக்கும் கத்தார் எனர்ஜி நிறுவனம் அவசர மீட்புப் பணிகளை முன்னெடுத்து ஆலையில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply