பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நடிகை..
சினிமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா, மிர்னா, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். வருகிற ஜூன் மாதம் இப்படம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை, நடிகை ஷோபனாதான். ரஜினிகாந்துடன் இணைந்து தளபதி திரைப்படத்தில் ஷோபனா நடித்திருந்தார். அதன்பின் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பற்றி தெரியவில்லை.






















