யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து
இலங்கை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் ,காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





















