இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
இலங்கை
இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.






















