தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்
இலங்கை
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்த உதவிக்காக இலங்கை அரசின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்துடன், கடினமான காலகட்டத்தில் அரசின் ஒற்றுமையை இந்த ஆதரவு பிரதிபலிப்பதாக விஜித ஹேரத் கூறினார்.
மேலும், இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்.
மீட்பு முயற்சிகள் முன்னேறும்போது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக, அரிசி, பருப்பு வகைகள், பால் மா, சர்க்கரை, ஆடைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட 950 மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை தமிழ்நாடு அரசு அண்மையில் அனுப்பியது.
இந்த நிவாரணப் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டன.























