பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய முடியாது - டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை
அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் பல டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தன.
இந்நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு பாஸ்டனில் உள்ள ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது
குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதாகும்.
ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது என கூறி கீழமை நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்தது.
அமெரிக்க சட்டம், 14வது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





















