நைஜீரியாவில் நடுகடலில் கவிழ்ந்த படகு - 26 பேர் பலி
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழப்பு நைஜீரியாவின், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (30) எடோ மாநிலம் நோக்கி படகு சென்றுகொண்டிருந்தபோதே நடு வழியில் படகு கவிழ்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனக் கூறப்படுகின்றனர்.
கடந்த மாதம் இதேபோன்று அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 31 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது






















