• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துஷார உபுல்தெனியவின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானம்

இலங்கை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் 50% அவரது இடைநீக்க காலத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த முடிவை அறிவித்தார்.

இதற்கிடையில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்க, சிறைச்சாலைகளின் பதில் ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது தற்போதைய கடமைகளுக்கு கூடுதலாக இந்தப் பொறுப்பில் பணியாற்றுவார்.

இதனிடையே, துஷார உபுல்தெனியாவை ஜூன் 13 ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply