• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமண வாழ்க்கை இந்த மாதிரி தான் இருக்கனும்!! -மிருணாள் தாகூர்.. 

சினிமா

பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை அடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொழில் மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்துவது முக்கியம். அதை எப்படி சமநிலைப்படுத்த முடியும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

உறவுகள் கடினமானவை என்பதை நாம் அறிவோம். சரியான துணியை தேர்ந்து எடுப்பதும் கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.  
 

Leave a Reply