• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதன்முதலாக பிரசவ அறைக்குள் தந்தைகளுக்கும் அனுமதி

இலங்கை

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த மனநிலையுடன் பெண்கள் குழந்தைகளை பிரசவிக்கின்றமை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply