• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் அதிக செலவீனங்களைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு

இலங்கை

நாட்டில் அதிக செலவீனங்களை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17 ஆயிரத்து 14 ரூபா தேவைப்படுவதாகவும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வறுமைக்கோடு தொடர்பான புதிய அறிக்கையினை நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவினைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு காணப்படுவதாகவும் குறைந்த செலவினைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை காணப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவாக 18,350 ரூபா காணப்படுகின்றது. மொனராகலையில் ஒருவர் வறுமை நிலையை எட்டாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 16,268 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply