• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய கலாபவனத்தை வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை

இலங்கை

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

13 வருடங்களாக மறுசீரமைக்கப்படாத ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் தேசிய கலாபவனம் ஆகியவற்றுக்கான கள விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கு தேவையான நிதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிர்மாணம் மற்றும் பராமரிப்பு தொடர்பில் நாடக கலைஞர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply