• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிள்ளைகளை பயன்படுத்தி யாசகம் பெற்று சம்பாதிக்கும் பெற்றோர்..

இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் விகாரையை சுற்றி யாசகம் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இக்குழந்தைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பெற்றோர்களே மீண்டும் பிள்ளைகளை யாசகம் பெற அனுப்புவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

05, 10, 16 வயதுக்குட்பட்ட பல சிறுவர்களை பெற்றோர் பயன்படுத்தி யாசகம் பெற்று பணம் சம்பாதிப்பதாகவும், இதில் பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த குழந்தைகள் பல தடவைகள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்த சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் வந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply