• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொஸ்கோவில் பதிவான பயங்கரவாத தாக்குதல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

இலங்கை

ரஷ்யாவின் – மொஸ்கோவில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 115 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவில் உள்ள (Crocus City) இசை நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கத்தில், இந்த பயங்கரவாத நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் குறித்த அரங்குக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

எனினும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நேற்று (வெள்ளிக்கிழமை 22) நடந்த இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆகவும், காயமடைந்தவர்களின் 115 ஆகவும் உயர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply