• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் பயங்கர விபத்து

இலங்கை

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி எதிரில் வந்த டிப்பருடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்தியதால் எவ்விதமான உயிரிழப்புகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply