• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெடுக்குநாறிமலை விவகாரம் - கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை

இலங்கை

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  சபையில் தெரிவித்தார்.
 

Leave a Reply