• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம்

இலங்கை

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடிப் படகு ஒன்று கடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய கப்பலுடன் குறித்த கடற்பரப்பிற்கு கடற்கொள்ளையர் குழுவொன்று வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply