• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திர நாயகியாக இருந்தவர் தான் ஜெயலலிதா. 

சினிமா

தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திர நாயகியாக இருந்தவர் தான் ஜெயலலிதா. சிங்கப்பெண், இரும்பு பெண் என புகழப்படும் இவர் ஆண்களை தன் கண் பார்வையிலேயே கட்டுப்படுத்தி விடுவார். அப்படிப்பட்டவரால் ஒரு கட்சி 15 நாளில் மங்கலம் பாடி இருக்கிறது.

தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் சட்டமன்ற தேர்தலை டார்கெட் ஆக வைத்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே மக்கள் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா வீடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வருகிறார்.

இதற்கு முன்னதாக இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கட்சியை ஆரம்பித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். அதுவும் விஜய்யை வைத்து தான் பல விளம்பரங்கள் செய்யப்பட்டது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை 15 நாளில் அக்கட்சி முடிவுக்கு வந்தது.

விஜய், SAC பிரச்சனையின் ஆரம்ப புள்ளி இதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதா தான் இதன் காரணகர்த்தா என டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார். அதாவது எங்கே இதன் மூலம் விஜய்யின் செல்வாக்கு உயர்ந்து விடுமோ என்ற காரணத்தால் ஜெயலலிதா அவரை தன் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார்.

உடனே விஜய்யும் அங்கு சென்று காலையிலிருந்து மாலை வரை காத்திருந்தாராம். ஆனால் திடீரென அம்மா உங்களை பார்க்க விரும்பவில்லை போகலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அப்போதே அவருக்கு கிலி பிடித்திருக்கிறது. அதே சூட்டோடு தன் அப்பாவிடம் கட்சியை கலைத்து ஆக வேண்டும் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

அது மட்டுமின்றி அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை வேறு விட்டார். அதன் பிறகு அக்கட்சிக்கு எண்டு கார்டு போடப்பட்டது.

இப்படி ஆரம்பித்த பிரச்சினை தான் தற்போது அப்பா மகன் இருவரும் பிரிந்திருக்கும் அளவுக்கு வந்திருக்கிறது. இதை டாக்டர் காந்தராஜ் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply