• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னனி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். 

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னனி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று அவருக்கு இருக்கும் மாஸ் விஜய், அஜித் இவர்களை போலவே சினிமாவில் அடுத்த இடத்திற்கு உட்காரவைத்திருக்கிறது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் நடிகராகவே சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.

அதுவும் விஜயின் அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்ற பேச்சும் ஒரு பக்கம் அடிபட்டுக் கொண்டு வருகிறது. விஜய் கூடிய சீக்கிரம் சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். அதனால் அடுத்த விஜய் யார் என்ற கேள்வி எழ ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலானோர் விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் நிரப்புவார் என்று கூறி வருகிறார்கள். 

இன்னும் சில பேர் ஒரே ஒரு தளபதிதான். ஒரே ஒரு விஜய்தான். அதனால் அடுத்த தளபதி என்பதெல்லாம் இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ஆசை தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுதான். அந்த வகையில் சிவகார்த்திகேயனும் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாகவேதான் நேற்று போரூரில் திடீரென தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஒரு பெருங்கூட்டத்தை கூட்டியதற்கு இதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

அதாவது விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் பெயர் தான் அடிபட்டு வருகிறது. இது சிவகார்த்திகேயனுக்கும் தெரியும். அதனால் அதை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே என்றைக்கும் இல்லாத திருநாளாக நேற்று அந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

மேலும் ரசிகர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் எனக்கு அப்பா கிடையாது. அண்ணன் கிடையாது. அதனால் என் வலிகளை சொல்ல யாரும் இல்லாமல் இருந்தேன். இப்போது ரசிகர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் என ஒரு பிட்டை போட்டு தன் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை திருப்ப ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார். இது கண்டிப்பாக விஜயின் இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் கையாளும் டெக்னிக்தான் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
 

Leave a Reply