• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் அண்மையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு குறித்த காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர்.

ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணிகள் 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணிகள் 41 பேருக்கும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply