• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிஸ்புல்லா அமைப்பின் மீது குறிவைக்கும் இஸ்ரேல்

லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியத் துருப்புக்கள் நபி சிட் கிராமத்தை இலக்கு வைத்து தொடர்ந்தும் வான்வழித் தாக்குதலை தொடுத்து வருகிவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அத்துடன், இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply