• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்

கனடா

கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்ற 32 வயதுடையவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வரும் நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.

எனினும் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு இவ்வாறனதொரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply