• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம் மாறும்

இலங்கை

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையமானது நாட்டில் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை நேற்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

அண்மைக் காலத்தில் நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும்

மிக முக்கியமான நிகழ்வு இது கருதப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வரலாற்று மையமாக இலங்கை விளங்கி வருகின்றது.

கொழும்பு துறைமுக நகரம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பை மீள்வரையறை செய்வதை நோக்கமாகக் கொண்ட பல பில்லியன் டொலர் பெறுமதிவாய்ந்த தொலைநோக்கு திட்டமாகும்.

வர்த்தகத் துறைகளுக்கு புத்தாக்கங்களை உருவாக்குவதற்கான சிறந்த சூழலையும் நாங்கள் வழங்குகிறோம்.

பிராந்தியத்தில் ஒரு முக்கிய பொருளாதார மையமாக இது மாற உள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் நிச்சயமாக அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘தெற்காசியாவுக்கான நுழைவாயில்’ மற்றும் கிழக்கு மற்றும் மேற்குக்கான மத்திய மையமாக திகழும் என்பதில் ஜயமில்லை
 

Leave a Reply