• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்!

சினிமா

கனடாவின் முக்கியமான தமிழ் ஆளுமையாகத் திகழ்ந்த கந்தவனம் ஐயா அவர்கள் காலமானதை நண்பர் தமிழன் வழிகாட்டி திரு.செந்தி மூலம் அறிந்து துயறுற்றேன். அவர் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.டொராண்டோவில் மணிமேகலைப் பிரசுரம் சார்பில் நாங்கள் நடத்திய நிறைய நூல் வெளியீட்டு விழாக்களுக்கும், கண்காட்சிகளுக்கும் தவறாமல் வந்து கலந்து கொண்டு பெருமைப் படுத்தியி ருக்கிறார். என் தந்தை தமிழ்வாணனின் கல்கண்டு வார இதழின் வாசகராகத் திகழ்ந்தவர் என்ற வகையில் அண்ணன் திரு.லேனா தமிழ்வாணனுடனும், என்னுடன் பாசத்துடன் பழகுவார்.

புலம் பெயர்ந்த நாட்டிலும் தாய் மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.வீட்டில் தமிழில்தான் பேச வேண்டும்; அப்போதுதான் தமிழ் வாழும் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருப்பார். கடும் குளிர் நாடான கனடாவில் வசித்தாலும் கூட தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி; பட்டு அங்கவஸ்திரத்துடன் மட்டுமே நான் இவரைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவுதான் வயதானாலும் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், பெரியவர்கள் இருப்பது பெரும் பலம். அவர் விட்டுச் சென்ற தமிழ் உணர்வை தொடர்வது அவருக்கு செய்யப்படும் சிறந்த அஞ்சலியாகும். அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்!

சென்னையிலிருந்து   ரவி  தமிழ்வாணன்

Leave a Reply