• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பலாங்கொடை பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

இலங்கை

அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற  குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்  மூவர் படுகாயமடைந்த நிலையில்  பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கலகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply