• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் 72 வயது மூதட்டிக்கு அரிய வகை சத்திர சிகிச்சை - சாதனை படைத்த மருத்துவர்கள் 

இலங்கை

இலங்கையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த 72 வயதான பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை வெற்ரிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படாத மிக அரிய வகை சத்திர சிகிச்சை இது என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவவருகையில்,

முத்துமெணிக்கே எனும் மூதாட்டி பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட காலமாக சிகிச்சை அளித்தும் அவரின் முதுகு வலி குணமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.

எண்டோஸ்கோபிக் முறையில் முதுகுத்தண்டில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது, ஏனெனில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது இல்லை, மேலும் மயக்க மருந்து இல்லாமல் குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூதாட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண குணமடைந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வயதான மூட்டிக்கு பதுளை போதனா வைத்தியசாலையில் அரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply