• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி நிகழ்வு

இலங்கை

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள,; அடுத்த சில நாட்களில் கனடாவைச் சேர்ந்தடைந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பர்ஹாவன்என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் அஞ்சலி நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. பர்ஹாவன் பிரதேசவாசிகளால் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply